இரு நாட்களில் விபத்துகளில் 23 பேர் பலி!

புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற 20 வாகன விபத்துகளில் 23 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 134 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஏப்ரல் 12 முதல் 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று முன்தினம் மாத்திரம் வாகன விபத்துகளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, பட்டாசு வெடித்தல் உட்பட பண்டிகை காலத்தில் இடம்பெறும் திடீர் அனர்த்தங்களின் எண்ணிக்கை இம்முறை குறைவடைந்துள்ளது.

Related Articles

Latest Articles