’20’ அடுத்து என்ன? 11 பேரடங்கிய குழுவை அமைத்தார் சஜித்! மனோவுக்கும் இடம்!!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக 11 பேரடங்கிய குழுவொன்றை ஐக்கிய மக்கள் சக்தி நியமித்துள்ளது.

இதில் 9 பாராளுமன்ற உறுப்பினர்களும், இரண்டு சட்டத்தரணிகளும் உள்ளடங்கியுள்ளனர்.

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட செயலமர்வொன்று இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழு உறுப்பினர்கள் விபரம் வருமாறு,

  1. ரஞ்சித் மத்தும பண்டார
  2. ராஜித சேனாரத்ன
  3. சரத் பொன்சேகா
  4. கபீர் ஹாசீம்
  5. மனோ கணேசன்
  6. எரான் விக்கிரமரத்ன
  7. இம்தியாஸ் பாக்கீர்மாகார்
  8. லக்‌ஷ்மன் கிரியல்ல
  9. ஹர்ஷ டி சில்வா
  10. சட்டத்தரணி சுரேஷ் பெர்ணான்டோ
  11. சட்டத்தரணி சிரால் லக்திலக்க

Related Articles

Latest Articles