அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக 11 பேரடங்கிய குழுவொன்றை ஐக்கிய மக்கள் சக்தி நியமித்துள்ளது.
இதில் 9 பாராளுமன்ற உறுப்பினர்களும், இரண்டு சட்டத்தரணிகளும் உள்ளடங்கியுள்ளனர்.
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட செயலமர்வொன்று இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழு உறுப்பினர்கள் விபரம் வருமாறு,
- ரஞ்சித் மத்தும பண்டார
- ராஜித சேனாரத்ன
- சரத் பொன்சேகா
- கபீர் ஹாசீம்
- மனோ கணேசன்
- எரான் விக்கிரமரத்ன
- இம்தியாஸ் பாக்கீர்மாகார்
- லக்ஷ்மன் கிரியல்ல
- ஹர்ஷ டி சில்வா
- சட்டத்தரணி சுரேஷ் பெர்ணான்டோ
- சட்டத்தரணி சிரால் லக்திலக்க