’20’ எவ்வாறு நிறைவேறும்? நீதி அமைச்சர் விளக்கம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரமே நிறைவேற்றப்படும், சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகள் நீக்கப்படும் – என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் சபாநாயகரால் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

திருத்தங்கள் சகிதம் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்டையுடன் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் அறிவித்துடன், 4 சரத்துகள் அரசியலமைப்புக்கு முரண் என்பதால் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர்,

” சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகள் நீக்கப்படும். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles