பாராளுமன்றத்தில் சிறுகட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிரணி உறுப்பினர்கள் நால்வர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர் என்று ‘திவயின’ வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசிலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இவர்கள் அரசாங்கத்துக்கான ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர்.
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க உள்ளவர்களில் மலையகம் மற்றும் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் உள்ளனர் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.