” பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளன. வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. ஆயிரம் ரூபா சம்பளம் கிடைத்தாலும் சமாளிக்ககூடிய தொகையாக அது அமையவில்லை. தொழில் சுமைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.” – என்று தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஒரு சில தோட்டங்களில் ஒரு நாள் பெயருக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல வழிகளிலும் தொழில் சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களின் பிள்ளைகளை பாதுகாக்கும் சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கான ஊழியர்களை குறைத்தல் உட்பட பல அடாவடி செயல்களில் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுவருவதாகவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
எனவே, தொழில் சுமைகள் எதுவும் அதிகரிக்கப்படாமல், முன்பிருந்த நடைமுறைகள் தொடரவேண்டும். அவ்வாறானதொரு நிலையில் ஆயிரம் ரூபா கிடைத்தால் அது ஆறுதாக இருக்கும். அதனைவிடுத்து தொழில் சுமைகளை அதிகரித்து, சலுகைகளை பறித்துவிட்டு சம்பள உயர்வை வழங்குவது ஏற்புடையதாக அமையாது.” – என்றார்.










