20 கிலோ கொழுந்து பறிக்குமாறு அழுத்தம்! நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்!! (photos)

மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 28.09.2021 இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மஸ்கெலியா டீசைட் தோட்ட  தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காது,  20 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வலியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகள் நிலையை அடுத்தே தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று போராட்டம் இடம்பெற்றது.

” இத் தோட்டத்தின் தேயிலைக்காணிகள்   நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியவை. எனினும், தோட்ட நிர்வாகம் தேயிலை செடிகளை முறையாக பராமரிப்பதில்லை. இதனால் காடாகிவருகின்றது. இந்நிலையில் 20 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இதனை ஏற்கமுடியாது.” – என தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், 50 எக்டர் வரையான தேயிலை மலைகள் காடுகளாகி மூடப்பட்டிருப்பதாகவும், ஆண் தொழிலாளர்களை ஒரு நாள் பெயருக்கு 750 கிலோ புற்களை வெட்டி கொம்பஸ்ட் செய்யும் படி வலியுறுத்துவதோடு, வேறு தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும்படி வலியுறுத்துவதாகவும் போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

எனவே இந்த விடயத்தில் தொழிற்சங்கங்களும், மலையக அரசியல் தலைமைகளும் தீர்க்கமான முடிவினை பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles