’20’ இற்கு எதிராக வாக்களிக்க முற்போக்கு கூட்டணி முடிவு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடம் இவ்வாரம்கூடி இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் எனவும் தெரியவருகின்றது.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமான அம்சங்கள் இருப்பதாலேயே அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கும், 20 இற்கு எதிராக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதற்கும் கூட்டணி தீர்மானித்துள்ளது.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது எனவும், வாக்கெடுப்பின்போது சிலர் நிடுநிலை வகிக்கவுள்ளனர் எனவும் வெளியாகியுள்ள தகவல்களை கூட்டணியின் உறுப்பினர் ஒருவர்  நிராகரித்தார்.

Related Articles

Latest Articles