2021 ஜனவரியில்கூட 1000 ரூபா கிடைப்பது சந்தேகமே!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச  வரவு – செலவுத் திட்ட உரை ஊடாக நேற்று யோசனை முன்வைத்துள்ளார். குறித்த முன்மொழிவு தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகள் தமது நிலைப்பாட்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனாலும் பிரதமரின் முன்மொழிவை அடிப்படையாகக்கொண்டு, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபா கிடைக்கவுள்ளது என சிலர் பிரச்சாரம் முன்னெடுப்பதுடன், வரவேற்று அறிக்கைகளையும் விடுத்துவருகின்றனர். இது மக்களை ஏமாற்றும் அரசியலாகும் என விமர்சனங்களும் எழுந்துள்ளன.

குறிப்பாக ” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பட்ஜட் ஊடாக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.சம்பள உயர்வை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பிடம் கோரிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளது. எனவே, முன்மொழிவு என்பது இறுதி தீர்மானம் அல்ல.

அதேபோல பட்ஜட் ஊடாக முன்மொழியப்படும் விடயங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாத அரசியல் கலாச்சாரமே இலங்கையில் நிலவுகின்றது. இதற்கு முன்னரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தரிசு நிலங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. அத்திட்டம் வெற்றியளித்ததா, இல்லை. ” – என்று மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பள உயர்வை வழங்காவிட்டால் கம்பனிகளின் முகாமைத்துவ உரிமை பறிக்கப்படும் என இதற்கு முன்னரும் பல தடவைகள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில் இம்முறை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை எடுபடுமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

பட்ஜட்டில் பிரதமர் முன்வைத்த முன்மொழிவு வருமாறு,

” தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021  ஜனவரி முதல்  ரூபா 1,000 வரை அதிகரிப்பதற்கும் முன்மொழிகிறேன்.  இந்த சம்பளத்தை செலுத்த முடியாத  தோட்டக் கம்பனிகளின் முகாமைத்துவ  ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வெற்றிகரமான வியாபார திட்டத்தை கொண்டதாக கம்பெனிகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாடொன்றி​னை சனவரி மாதத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். ​​”

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles