பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று 31 ஆம் திகதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், இ.தொ.கா. பிரமுகர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில் அவர்கள் பங்கேற்றிருந்த நிகழ்வுகளில் அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவரும் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் ஏனையவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை இன்னும் சில நாட்களுக்கு பின்பற்றவேண்டியுள்ளது. இதன்காரணமாகவே கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.