2024 ஜனாதிபதித் தேர்தலில் பஸிலை ஆதரிக்க தயார் – கூட்டமைப்பு அறிவிப்பு

” இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்சவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகளைப்
பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த தெளிவான வேலைத்திட்டம் இருந்தது.

அதேபோல் சஜித்துடன் பேச்சுகளை நடத்தியவேளை வடக்கு, கிழக்கு மக்களின் பிரதான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனால் அவரை ஆதரித்தோம். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் வெற்றிபெறவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதியஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து நாம் பேச்சுகளை நடத்தியிருந் தோம். இதன்போது உங்களால் மட்டுமே தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக் குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும்
என்பதை நான் நேரடியாகக் குறிப்பிட்டிருந் தேன்.

ஏனெனில் சிங்கள மக்கள் எதிர்க் காத ஒரே தலைவர் என்ற காரணத்தால்
அவர் எடுக்கும் தீர்மானங்கள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாது. நான் கூறியதை ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ச ஏற்றுக்கொண்டபோதும்,
இன்னமும் தீர்வுகளை வழங்க அவர் முன்வரவில்லை – என்றார்.

Related Articles

Latest Articles