2030 வரை ரணிலே ஜனாதிபதி – அடித்துக் கூறுகிறார் ரங்கே பண்டார

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

எனவே சகல கட்சிகளும் எவ்வித பேதமும் இன்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரணில் விக்கிரமசிங்கவே எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகவே பதவி வகிப்பார். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்று உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரையில் வெற்றி பெற்றதில்லை.

அதே போன்று எந்தவொரு அரசியல் தலைவரும் வெற்றியடைந்ததில்லை. ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் பேசுவது பிரயோசனமற்றது. ஏனைய கட்சிகளுக்கும் அதே நிலைமையே ஏற்படும்.

நாட்டில் பல்வேறு பௌத்த மகா சங்கங்கள் காணப்படுகின்ற போதிலும், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் தொடர்பிலேயே அனைவரும் பேசுகின்றனர். அதே போன்று தான் இலங்கையிலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை மாத்திரமே ஸ்திரமான கட்சிகளாகவுள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனித்துச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க முடியும்.

எவ்வித பேதங்களும் இன்றி அனைவரையும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இன, மத, மொழி பேதமின்றி அனைவருடனும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இந்நாட்டின் பிரஜையாவார். அவரது திறமையற்ற நிர்வாகம் மற்றும் பலவீனத்தின் காரணமாகவே நாடு இந்த நிலைமையை அடைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் அவருக்கு இங்கு வசிப்பதற்கான உரிமை காணப்படுகிறது. அதற்கமைய நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.

அரசியலமைப்பிற்கமைய பிரஜைகள் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அரச தலைவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அது கோட்டாபய ராஜபக்ஷவாகவும் இருக்கலாம். மஹிந்த ராஜபக்ஷவாகவும் இருக்கலாம். வேறு பிரஜைகளாகவும் இருக்கலாம் என்றார்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles