21/4 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார்? வெளியானது தகவல்

நௌப்பர் மௌலவி, ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவருமே 21/4 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

”   நௌப்பர் மௌவிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தது. அவரே அவ்வமைப்பின் எண்ணத்தை நாட்டுக்கு கொண்டுவந்தார். சஹ்ரானையும் வழிநடத்தினார். அவர் தற்போது சிறையில் உள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் நௌப்பர் மௌலவி, ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவருமே பிரதான சூத்திரதாரிகள் என கண்டறியப்பட்டுள்ளனர்.” – என்றனர்.

Related Articles

Latest Articles