உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள அதன்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான நாமல் பலல்லேல, ஆதித்திய பட்டபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஸடீன் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில், இவருக்கு எதிராக 855 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.