நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
‘ மேற்படி கூட்டத்தில் பங்கேற்பதில்லை என கட்சியின் முகாமைத்துவக்குழு தீர்மானித்துவிட்டது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கும் என சில எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வெளியிட்டு வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
		 
                                    









