வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜுன் 22 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இவ்விவகாரத்தை அவசர விடயமாகக்கருதி விரைவில் விவாதத்துக்கு உட்படுத்துமாறு சபாநாயகரிடம், ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுக்கவுள்ளது.
அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் வரவுள்ளார்.