“ ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும்போது 25 வருடங்களாக ரணில் விக்கிரமசிங்கவுக்காக நாம் அடிவாங்கினோம், இன்று அவர் எம்மை அடிக்கின்றார்…” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ஊழல், மோசடிகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் என்ன நடக்கின்றது? ஊழல், மோசடிகள் தொடர்பில் கதைப்பவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு ஏதுவான வகையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
பொருளாதாரம் முன்னேறிவருகின்றது எனக் கூறுகின்றனர், ஆனால் மின் கட்டணம் மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. மறுபுறத்தில் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. அண்மையில் நடைபெற்ற போராட்டம்மீதுகூட தாக்குதல் நடத்தப்பட்டது.
ரணிலுக்காக நாம் 25 வருடங்களாக அடிவாங்கினோம், இன்று அவர் என்மை அடிக்கின்றார்.” – என்றார்.