நாட்டில் நேற்று மாத்திரம் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்றுறுதியானவருடன் தொடர்பினை பேணிய மூவருக்கும், சேனப்புர புனர்வாழ்வு முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த ஐவருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் ஈடுப்பட்டிருந்த நான்கு பேருக்குமே கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 2 ஆயிரத்து 106 பேர் குணமடைந்துள்ளனர். 665 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.