அரசாங்கத்தால் மாணிக்கக்கல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மாணிக்கக்கல் சுரங்க குழிகள் இன்னும் மூடப்படாததால் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையால் பொகவந்தலாவ சீனாகலை பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வினை மேற்கொள்ள இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அனுமதி
வழங்கப்பட்டிருந்தது.
பொகவந்தலாவை சீனாகலை தோட்டத்தில் கால்நடைகளுக்கு புல் ஆறுக்கும் காணியிலேயே மாணிக்ககல் அகழ்வினை மேற்கொள்ள கடந்த 2015
ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், ஒப்பந்தகாலம் நிறைவடைந்து சுமார் மூன்று வருடங்கள் கடந்துள்ளபோதிலும் குழிகளை மூடுவதற்கு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபை
நடவடிக்கை எடுக்கபடவில்லை என கால்நடை வளர்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த பகுதியில் மாத்திரம் 48 மாணிக்கக்கல் சுரங்க குழிகள் தோண்டப்பட்டுள்ளன. எனவே, அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்