இலங்கையின் முன்னணி மற்றும் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பாளர்களான கிரிஸ்புரோ நிறுவனம் வளைகுடா பிராந்தியத்திற்காக முதலாவது ஏற்றுமதியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு பிராந்தியத்தினால் கிடைத்த கேள்விகளுக்கமைய அமைய குளிரூட்டப்பட்ட 30 மெற்றிக் தொன் கோழி இறைச்சி தொகையை ஓமானில் உள்ள அல்ஹமாதி டிரேங்கிற்கு அண்மையில் ஏற்றுமதிசெய்துள்ளது.
கிரிஸ்புரோவினால் வளைகுடா பிராந்தியத்திற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி தொடர்பாக கருத்து தெரிவித்த கிரிஸ்புரோவின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஸ்செலர்,
‘கொவிட் 19 தொற்று நோயின் பின்னர் நாடு சீரடைந்து வருகின்ற நிலையில் எமக்கு மிக விரைவாக அதற்கு ஏற்றாற் போல் மாற்றமடைய வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் நாம்எதிர்கொண்ட சவால்கள் காரணமாக இந்த நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டதுடன் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக ஒட்டு மொத்த தேசிய உற்பத்திக்கு சமமாக எமது ஏற்றுமதியின் அளவு அதிகரிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் சிறந்த விதத்தில் மற்றும் போஷாக்கு நிறைந்த எமது கிரிஸ்புரோ தயாரிப்புக்களை வளைகுடா ஒத்துழைப்பு பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்வதற்குகிடைத்தமையானது நிறுவனம் என்ற ரீதியிலும் நாடுஎன்ற ரீதியிலும் நாம் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக கருதமுடியும்.’ என தெரிவித்தார்.
தமது ஏற்றுமதி விதிமுறைகளுக்கு கவனம் செலுத்தி இதற்கு முன்னர் மாலை தீவிற்கு தமது சிறந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்த கிரிஸ்புரோ, வளைகுடா ஒத்துழைப்பு பிராந்தியத்திற்கு தமது ஏற்றுமதிகளை விஸ்தரிப்பதற்காக நடவடிக்கை எடுத்தமையினால் 2.8 மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதிசந்தைக்காக இலங்கையின் சிறந்த கோழி இறைச்சி உற்பத்திக்கு வழியை திறந்துவைத்துள்ளது.
முழுமையாக நிறுவனம் என்ற ரீதியில் கிரிஸ்புரோ இந்த நாட்டில் கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்க்கையை பலப்படுத்துவது குறித்து தமது சமூக பொறுப்புணர்வு வேலைத்திட்டங்கள் அனைத்தையும் நிர்மாணித்துள்ளது.
தமது நிறுவன ரீதியான சமூக பொறுப்புணர்வு வேலைத்திட்டத்திற்குள்திரிசவிய, பிரஜாஅருண, கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நேரடிபங்களிப்பை பெற்றுக்கொடுப்பதுடன் மத்திய மாகாணம், வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றில் சோளம் மற்றும் சிறிய கோழிப் பண்ணை உரிமையாளர்கள் பெரும்பாலானோருக்கு இந்ததிட்டத்தின் ஊடாக சந்தை மற்றும் புதிய தொழில்நுட்பம்மட்டுமன்றி வர்த்தக அறிவினையும் பெற்றுக்கொடுக்க கிரிஸ்புரோ நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதே சமட்டத்தில் வெற்றியைப் பெற்றுக்கொள்ளமுடிந்த போதிலும்ஒருவராலும் கவனிக்கப்படாத அல்லது ஒத்துழைப்பு வழங்கப்படாத விளையாட்டு வீரவீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே Crysbro Next Champ திட்டத்தின் முக்கியநோக்கமாக அமைவதுடன் நாடு முழுவதிலும் பரந்துவாழும் திறமையான இளம் விளையாட்டு வீரவீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான வழிநடத்தல்கள், பயிற்சிகள், உணவு முறைகள் போன்ற விடயங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கி அதன்மூலம் அவர்கள் தேசிய மட்டத்தில் உயர்த்துவதே இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.
‘சிசுதிரிய’ ஊடாக பாடசாலை மாணவமானவிகளுக்கு தேவையான புத்தகங்கள் வழங்குதல் மற்றும் தொழில் கல்வியை பெற்ற மாணவர்கள் பலருக்கும் நன்மைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
அத்துடன் பிரஜா அருணமூலம் 34 வீடுகள் அமைத்து க் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 80 வீடுகள் திருத்தப்பட்டுள்ளன. கிரிஸ்புரோ ஹரிதசத்கார வேலைத்திட்டத்தின்மூலம் 5000 மரக்கன்றுகள் நாட்டுவதன் ஊடாக கிரிஸ்புரோ சுற்றாடலை பாதுகாக்கவிரும்பும் நிறுவனமென முழு உலகிற்கும் அடையாளப்படுத்தியுள்ளது.
1972 ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக்குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கிநிற்க வேண்டுமென்றவிருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீனமுறையில் கோழி இறைச்சியை உற்பத்திசெய்து செங்குத்தா கஉயர்ந்திருக்கும் ஒருநிறுவனமாகும்.
இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாககணினிமயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவனஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசைகரண்டிவரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.