32,790 பேருக்கு கொரோனா – 8,845 பேர் சிகிச்சையில் – 152 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (13) 29 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 139 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 26 ஆயிரத்து 89 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 20 ஆயிரத்து 385  பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 655 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 32 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 23  ஆயிரத்து 792 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று  மூவர் உயிரிழந்தார். இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles