348,000 ரூபா பெறுமதியான தங்க நகையைத் திருடிச் சென்ற பெண் கைது

பொரலந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 22ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து 72 வயதுப் பெண்ணின் கண்ணில் மிளகாய்ப் பொடி தடவி, கழுத்தை நெரித்து 348,000 ரூபா பெறுமதியான தங்க நகையைத் திருடிச் சென்ற பெண்ணை போகஹகும்புர பொலிஸார் கைது செய்தனர்.

அதே பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எழுபத்திரண்டு வயதான குறித்த பெண் நேற்றிரவு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது பின்னால் வந்த ஒருவர் மிளகாய் பொடியை கண்ணில் தடவி கழுத்தில் கிடந்த நகையை உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது திருடப்பட்ட தங்க நெக்லஸ் சந்தேகநபரின் கையிலிருந்து தொலைந்து, பாத்திரத்தில் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அந்த நகை டிஷ் ரேக்கில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஹகும்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் குறித்த பெண்ணின் கண்களில் மிளகாய் பொடி தடவி கழுத்தை நெரித்தமையினால் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Related Articles

Latest Articles