367 பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு ஆகஸ்ட் 23 முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.










