ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து வெளியேறியுள்ள சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என தெரியவருகின்றது.
குறித்த இயக்கத்துக்கு ’43 ஆம் பிரிவு’ என பெயரிடப்படவுள்ளது எனவும், இது இலக்கமல்ல தலைமுறை என்ற மகுடனத்தின் கீழ் அவ்வியக்கத்தின் அரசியல் பயணம் ஆரம்பமாகும் எனவும் அறியமுடிகின்றது.
கடந்த பொதுத்தேர்தலின் பிறகு செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை இந்த இயக்கத்துக்கு இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கபபட்டுவருகின்றது.
1943 ஆம் ஆண்டில்தான் இலங்கையில் இலவசக்கல்விக்கான சட்டமூலம் இயற்றப்பட்டது. தரம் ஒன்று முதல் பல்கலைக்கழக கல்விவரை இலவசக்கல்வி வழங்கப்பட்டது. இதுவே இலங்கையில் சமூக வளர்ச்சிக்கு வித்திட்டது. எனவேதான் ’43’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்தும் ஒரு பங்காளியாக குறித்த இயக்கம் செயற்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.