48,380 பேருக்கு கொரோனா – 41,325 பேர் குணமடைவு – 232 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 219 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, நேற்று மாத்திரம் 536 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த மார்ச் முதல் இன்றுவரை 48 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles