5000 ரூபாவில் வீடு கட்ட முடியுமா? தோட்ட மக்களை ஏமாற்றிய ‘பட்ஜட்’!

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீண்டுமொருமுறை இந்த அரசால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.” – என்று பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எந்நாளும் ஏமாற்றப்படுகின்றனர். இம்முறையும் பாதீடு ஊடாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.  மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் வீடுகளாவது தேவை. அப்படியானால் ஒரு வீட்டுக்கு 5 ஆயிரம் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை வைத்துக்கொண்டு மலசலக்கூடம் ஒன்றைக்கூட கட்டமுடியாது.

தோட்ட மக்களுக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை மில்லியன் ரூபா தேவை.” – என்றார் சரத் பொன்சேகா.

Related Articles

Latest Articles