கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது. 43 ஆயிரத்து 747 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 901 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.