6 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

இலங்கையில் மேலும் 109 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கும், தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 39 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 23 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இன்றைய தினத்தில் அதனடிப்படையில் மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் 2451பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான 3 ஆயிரத்து 501 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 406 பேர் சிகிச்சைபெறுகின்றனர்.

Related Articles

Latest Articles