அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளது.
அத்துடன், 20 எதிர்த்து நிச்சயம் வாக்களிப்பேன் என்று வடிவேல் சுரேஷ் எம்.பியும் தெரிவித்தார்.
அதேவேளை, 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பாராளுமன்ற உறுப்பினர்களில் எழுவர் 20 ஐ எதிர்க்கும் அதேவேளை, இருவர் ஆதரிக்கின்றனர்.
எதிரவாக வாக்களிக்கவுளவர்கள்,
1.மனோ கணேசன்,
2.இராதாகிருஷ்ணன்,
3.பழனி திகாம்பரம்
4.வேலுகுமார்
5.அரவிந்தகுமார்
6.உதயகுமார்
7. வடிவேல் சுரேஷ்
ஆதரவாக் வாக்களிக்கவுள்ளவர்கள்
- ஜீவன் தொண்டமான்
- மருதபாண்டி ராமேஷ்வரன்










