75 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மூவர் காயம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா மஸ்கெலியா பகுதியில் நேற்றிரவு (25) ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்தே ஆட்டோ இவ்வாறு விபத்துக்குள்ளானது.

ஆட்டோவில் ஓட்டுநர் உட்பட மூவர் பயணித்துள்ளனர். விபத்தையடுத்து பின் இருக்கையில் இருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். ஏனைய இருவருக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

Related Articles

Latest Articles