8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபுக் கடல், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களுக்கு செல்வதை  மீனவர்கள், கடல்சார் தொழில்களில் ஈடுபடுவோர் மறுஅறிவித்தல் வரை அதனை தவிர்த்து செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles