“ 988, 1989 களில் போட்ட விளையாட்டை தற்போது போட வரவேண்டாம். அந்த அரசியல் கலாசாரம் மாறிவிட்டது. அன்று மஹிந்த ராஜபக்ச இருந்தார். இன்று நாமல் ராஜபக்ச இருக்கின்றார். இது புதிய அரசியல் பரம்பரை என்பதை புரிந்துகொண்டால் சரி.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊரான அநுராதபுரம், தம்புத்தேகமவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று நடத்திய அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். பேச்சு நடத்துவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றேன் எனவும் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்தார்.
அடக்குமுறைமூலம் தமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது எனவும் சூளுரைத்துள்ளார் நாமல்.










