9ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மகிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டார்.
9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் ஆளும் கட்சியின் உறுப்பினர் தினேஸ் குணவர்தன, மகிந்த யாபா அபேவர்தனவின் பெயரை முன்மொழிந்தார்.
அதன்பின்னர் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை வழிமொழிந்தார்.
இதன்பின்னர் மகிந்த யாபா அபேவர்தன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு. கடமைகளைப் பொறுப்பேற்று, சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.