90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – பலி எண்ணிக்கை 546 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் 177 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 2ஆவது அலைமூலம் 85 ஆயிரத்து 465 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

வைரஸ் தொற்றியவர்களில் இதுவரை 86 ஆயிரத்து 759 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles