2024 கபொத உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளில் 19 ஆயிரத்து 244 பேர் 3 பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.
பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போதே இந்த தகவல் வெளியிடப்பட்டது.
இதன்போது வெளியிடப்பட்ட முக்கிய சில தகவல்கள் வருமாறு,
பாடசாலைகளில் இருந்து 2 லட்சத்து 22 ஆயிரத்து 774 பரீட்சார்த்திகள், 51 ஆயிரத்து 587 தனியார் பரீட்சாத்திகள் என உயர்தரப்பரீட்சைக்கு 2 லட்சத்து 74 ஆயிரத்து 361 பரீட்சாத்திகள் தோற்றி இருந்தனர்.
இவர்களில் 64.73 சதவீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமைப் பெற்றுள்ளனர்.
அதாவது பாடசாலைகளில் இருந்து ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 964 பரீட்சார்த்திகளும், 27 ஆயிரத்து 624 தனியார் பரீட்சாத்திகளும் என ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 588 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றுள்ளனர்.
அதேவேளை, பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 9 ஆயிரத்து 458 பரீட்சார்த்திகள் 3 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். (3.45 சதவீதம்)
29 ஆயிரத்து 244 பரீட்சார்த்திகள் 3 பாடங்களிலும் சித்திஎய்த தவறியுள்ளனர். இது 10.66 சதவீதமாகும்.
2024 ஆம் ஆண்டிற்கான கபொத உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகளில் 456 பேரின் பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
420 பாடசாலை பரீட்சாத்திகளினதும், 36 தனியார் பரீட்சாத்திகளினதும் பெறுபேறுகளே இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
முழுமையான விசாரணைகளின் பின்னர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.