வவுனியாவை சேர்ந்த ஐவர் தமிழகத்தில் தஞ்சம்!

மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

வவுனியா, நெடுங்குழி பகுதியை நந்தகுமார் , அவரது மனைவி நித்யா மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளே இவ்வாறு தமிழகம் சென்றுள்ளனர்.

மன்னாரில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா கொடுத்து , பைப்பர் படகில் நேற்று மாலை புறப்பட்டு , இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கரையொதுங்கியுள்ளனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார், இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பொருட்களின் விலைகள் அதிகரித்து, வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles