‘கொரோனா’ – இலங்கையில் 3 வாரங்களில் 40 மரணங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் கடந்துள்ள 23 நாட்களில் மாத்திரம் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத காலப்பகுதியில் கொரோனாவால் 13 பேரே உயிரிழந்திருந்தனர்.31 ஆம் திகதியாகும்போது மரண எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.

எனினும் கடந்துள்ள 15 நாட்களில் மாத்திரம் 33 பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. உயிரிழந்தவர்களில் 90 வீதமானோர் 60 வயதைக்கடந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இலங்கையில் கொரோனா 2 ஆவது அலைமூலம் ( மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) நேற்று வரை 13 ஆயிரத்து 79 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதில் 3 ஆயிரத்து 106 என்ற எண்ணிக்கையுடன் மினுவாங்கொட கொத்தணி பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், பேலியகொட கொத்தணி பரவல் 9 ஆயிரத்து 970 ஐ தாண்டியுள்ளது. 2ஆம் அலைமூலம் தொற்றுக்குள்ளானவர்களில் 7 ஆயிரத்து 899 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை ,இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று நள்ளிரவுவரை 16 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இவர்களில் 11 ஆயிரத்து 324 பேர் நேற்றுவரை குணமடைந்துள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles