‘பேலியகொட கொத்தணிமூலம் இதுவரை 10,674 பேருக்கு கொரோனா’

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 13 ஆயிரத்து 780 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொட கொத்தணி – 3,106

பேலியகொடை- 10,674

இவர்களில் 8 ஆயிரத்து 70 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று மாத்திரம் 11 ஆயிரத்து 130 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 11 ஆயிரத்து 495 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 737 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles