சிட்னியில் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் நால்வர் பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது.
இன்று பிற்பகல் வேளையிலேயே இந்த பயங்கரச சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர், அவரின் குழந்தைகள் மற்றும் வணிக நிலையத்தில் இருந்தவர்கள்மீது நபரொருவர் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை தொடர்கின்றது.
கத்திக்குத்து தாக்குதலில் ஏழுபேர்வரை காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.