சமூக ஊடகங்களில் குழந்தைகளின் படங்களை பதிவிடுவது குறித்து எச்சரிக்கை

ஆஸ்திரேலிய பெற்றோர் சமூக வலைத்தளங்களில் தமது பிள்ளைகளின் படஙகளை பகிர்வது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், இணையவழி மோசடியாளர்கள் அப்படங்களை குறிவைக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சமூக ஊடகங்களில் தமது பிள்ளைகளின் படங்களை பகிரும் பெற்றோரை பாலியல் நோக்கத்தில் பலர் இலக்குவைப்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளதையடுத்தே Australian Institute of Criminology (AIC) நிறுவனத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையவழி கும்பல்கள், தாங்கள் பணம் செலுத்தினால் பிள்ளைகளின் நிர்வாண படங்களை தருவீர்களா என பெற்றோரிடம் வினவியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

4000 பேரிடம் இந்த விடயங்கள் குறித்து கருத்து கோரப்பட்டதாகவும் இவர்களில் 100 இற்கு அதிகமான பெற்றோர் தங்களிடம் பிள்ளைகளின் நிர்வாண படங்களை ஆகக்குறைந்தது ஒருவராவது கோரியுள்ளனர் எனவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

எனவே, குழந்தைகளின் படங்களை பகிரும் போது சிந்தித்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles