மின் கம்பத்துடன் மோதி பஸ் விபத்து

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை ஹல்பே பகுதியில் 33, 000 அதிவேக மின் கம்பத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் மின்கம்பம் உடைந்து வீதியில் விழுந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது. இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக ஹல்பே தொடக்க ஹல்தமுல்ல வரையான பகுதிகள் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை தொடக்கம் தியதலாவ பகுதி வரை 33000 அதி வேக மின்சாரத்தை எடுத்துச் செல்லும் மின்கம்பமே இவ்வாறு உடைந்து வீதியில் விழுந்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயன்பாடுகள் எவருக்கும் ஆபத்தில்லை என சமனலவெவ காவல் துறையினர் தெரிவித்தனர். பேருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சமனலவெவ காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.எப்.எம். அலி

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles