வர்த்தகர் சுட்டுக்கொலை!

அம்பாந்தோட்டை, ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றின் உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றுள்ளதுடன், ஹுங்கம திஸ்ஸ வீதி பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வரும் இவர், நேற்று (9) இரவு முதலாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது கொலையா? அல்லது தற்கொலைய? என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles