பொலிஸ் அதிகாரியை தாக்கி கொள்ளையிட்ட ஐவர் கைது!

மிரிஹான காவற்துறையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உடமைகளை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், துனுவாங்கிய பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்

மிரிஹான காவற்துறையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையில் துனுவாங்கியாவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பொலிஸ் அதிகாரியை தாக்கியவர்கள் பொலிஸ் அதிகாரியின் கழுத்தில் இருந்த இரண்டு லச்சத்தி நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியையும் எழுபதாயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் இருபதாயிரம் ரூபா பணத்தையும் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையின் வார்டு இலக்கம் 08 இல் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர மற்றும் பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோபா டி.எம்.ரத்நாயக்க ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பதில் நிலைய கட்டளைத் தளபதி திரு. உபோப குமாரரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபர்களை இன்று நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

ராமு தனராஜா

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles