தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இரு இளைஞர்கள் இன்று (26) பிற்பகல் 2.30 மணியளவில் மின்சாரம் தாக்கிய நிலையில் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் தண்ணீர் தொட்டியினை சுத்திகரிக்க கட்டடிடத்தின் மேல்பகுதிக்கு இளைஞன் ஒருவர் சென்றுள்ள நிலையில், மின்சாரம் (அதியுயர் மின்சாரம்) தாக்கி கீழே (மாடியில்) விழுந்துள்ளார்.
கட்டிடத்தின் மேல் மாடிக்கு சென்றவரை காணவில்லை என அருகில் உள்ள பலசரக்கு கடையில் பணிபுரியும் ஊழியர் கட்டிட மேற்பகுதிக்கு சென்றபோது, குறித்த இளைஞனுக்கும் மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து தூக்கி (தரையில்) கீழே வீசப்பட்டுதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில், மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வேணாவில் மற்றும் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 20 வயதுடைய இரு இளைஞர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.