‘கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வு விக்டோரியா நீர்த்தேக்கத்தை பாதிக்காது’

கண்டி பல்லேகல பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் விக்டோரியா நீர்த்தேக்கத்தை பாதிக்காது என்று பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி ஜகத் குணத்திலக்க தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் பல்லேகல பிரதேசத்திற்கு அருகாமையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட சிறிய பூகம்பங்களின் தாக்கத்தின் தன்மையை அறிவது தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில், இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் குறித்த ஆய்வு அறிக்கை தொடர்பில் இவ்வாறு விளக்கமளித்தார்.

புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி ஜகத் குணதிலக்க. மேலும் கூறுகையில்,

விக்டோரியா நீர்த்தேக்கம் ஆனது உலகின் மிக திறமையான வடிவமைப்பாளர்களால் கட்டப்பட்டது. அந்த பகுதியில் அதிகபட்ச நில அதிர்வு தீவிரம் பற்றி,கடந்த 100 ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கங்களின் அளவைக் கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட ஆய்வொன்றின் அடிப்படையில் அவ்வாறு நீர்த்தேக்கத்தை பாதிக்கும் பூகம்பமோ நில அதிர்வுகள் எதுவுமே இல்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கை தீவானது , பூகம்பங்கள் ஏற்படக்கூடிய பகுதியில் இல்லை என தெரிவிக்கும் சிரேஷ்ட பேராசிரியர் , சமீபத்தில் பல்லேகல அருகே ஏற்பட்டிருக்கும் நிகழ்வை பூகம்பங்கள் என மக்கள் கருதினாலும் அவை பூகம்பங்கள் அல்ல என்றும் கூறினார்.

இந்த நிலநடுக்கம் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு சிறிய நில அதிர்வு என்று அவர் வலியுறுத்தினார்.

சுண்ணாம்பு தொடர்பான தொழில்கள் இந்த பிராந்தியத்தில் இடம்பெறுகின்றன.இந்த பூகம்பங்களுடன் அவை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் மாற்றமாக பூகம்பமே இதற்குக் காரணம் என்று முடிவு செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.

சுண்ணாம்புக் கல் நாட்டுக்கு இன்றியமையாத வளமாக இருப்பதால், அதை, அதன் இடத்திலிருந்து மிகக் கவனமாக அகழ்ந்தெடுக்க வேண்டும். அதை முறையான தொழில்நுட்ப அறிவுடன் தோண்ட வேண்டும்.விக்டோரியா நீர்த்தேக்கம் கட்டப்பட்ட பின்னர், நீர் அதன் அதிகபட்ச கொள்ளவை எட்டிய பல சம்பவங்கள் இருந்த போதிலும் கூட முந்தைய நான்கு பூகம்பங்களிலும் நீர்த்தேக்கம் அதன் அதிகபட்ச திறனை எட்டவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

பூகம்பம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் புவியியல் துறை, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு, புவியியல் மற்றும் சுரங்க பணியகம், பேராதனை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆய்வாளர்கள், கண்டி மாவட்ட அதிகாரிகள் என பலர் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles