“ ஜனாதிபதி தேர்தலில் கண்டி மாவட்டத்திலும் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார். அவரே முதலிடம் பிடிப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதுவே எமக்கான நற்செய்தி” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இரத்தினபுரியில் தற்போது நடைபெற்றுவரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஜே.வி.பிக்கான ஆதரவு அலை குறைந்துவிட்டது, எமது தலைவர் சஜித்துக்கான ஆதரவு அலையே தற்போது கோலோச்சியுள்ளது. அதனால்தான் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் சேறுபூசும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
யார் என்ன சொன்னாலும் செப்டம்பர் 21 ஆம் திகதி சஜித்துக்கு பேராதரவு வழங்குவதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தார். வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. தற்போது அந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மலையகத்தில் இருக்கும் கோமாளி அமைச்சர் மக்களை போராட்டத்துக்கு அழைத்தார், வர்த்தமானி இரத்து செய்யப்பட்ட பிறகு, சம்பளம் அல்ல ஒன்றும் கிட்டாது, வேலைக்கு செல்லுங்கள் என தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கின