ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கபோவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
அநுராதபுர மாவட்டத்தில் கட்சி ஆதரவாளர்களிடம் கருத்துகோரிய பின்னரே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மொட்டு கட்சியின் முக்கிய அரசியல் தளபதிகளுள் எஸ்.எம். சந்திரசேனவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.










