ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.
ராஜித சேனாரத்ன களுத்துறை மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களை நேற்று முன்தினம் அழைத்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்தே ஜனாதிபதியை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளார்.
