ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணான்டோ, தான் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ நாட்டை அழிக்ககூடிய சக்தியிடமிருந்து நாட்டை பாதுகாக்கக்கூடிய தரப்புகளுடன் நான் இன்று முதல் பேச்சுகளை ஆரம்பிக்கவுள்ளேன்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை நான் சந்தித்தது கிடையாது. எனவே, ஜனநாயக விரோதிகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு ஜனாதிபதியும், எதிர்க்கட்சி தலைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.” –எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஜனநாயக விரோத சக்தியிடமிருந்து நாட்டைக்காக்க அனைத்து தரப்புகளுடனும் பேசவுள்ளதாகவும் அவர் கூறினார்.