கருத்தரங்குக்கு வராத மாணவர்களை தாக்கிய அதிபர்: எழுவர் வைத்தியசாலையில்!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தபளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் இருந்து இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஏழு மாணவர்கள், அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரால் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா வலய கல்வி காரியாலயத்திற்கு சென்று பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யுமாறும், அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோர் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

எனினும், இச்சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்,

“ கடந்த சனிக்கிழமை பாடசாலை அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி கருத்தரங்குக்கு செல்லாத ஏழு மாணவர்களை பிரம்பால் அமானுஷ்யமாக தாக்கியுள்ளார். இதனால் பிள்ளைகளுக்கு நடக்க கூட முடியாதுள்ளது.” – என்று குறிப்பிட்டனர்.

அதேவேளை, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளும் , ராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் உடனடியாக இந்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து பாடசாலையில் இருந்து குறித்த அதிபரை வெளியேற்றி நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அழைத்துச் சென்றதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

குறிப்பு ( இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாக தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டால் அது தொடர்பான செய்திகளையும் பதிவிடுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.)

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles