மத்திய மாகாணத்தில் நேற்று 30ஆம் திகதிவரை 408 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என மாகாண சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கண்டி மாவட்டத்தில் 235 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 121 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 52 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
இதில் குறிப்பாக கண்டி மாவட்டத்தில் அக்குரண சுகாதார சேவையின் பிரிவில் 71 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ சுகாதார பிரிவில் 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.